தற்போதைய செய்திகள்

அகதிகள் முகாமில்   4வது நாளாக உண்ணாவிரதம்

செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 4 வது நாளாக புதன் கிழமை ஈழத்தமிழர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீனியர்கள் உட்பட 41 ஈழத்தமிழர்களை  செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தங்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் 45 நாட்களுள் தங்களை விடுதலை செய்வதாக கூறிச்சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனையடுத்து மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 7 அகதிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 வது நாள் புதன் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் காந்திமோகன், ரமேஷ் ஆகிய  2 பேர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 9 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அவர்களிடம் வட்டாட்சியர் இளங்கோ, டிஎஸ்பி மூவேந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக கூறி தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT